Sunday, March 27, 2011

Sunday, March 27, 2011

மெஹந்தி பார்ட்டி



திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் மறக்க முடியாத பரவச நிகழ்வுதான்.சமீபத்தில் என் உறவினர் வீட்டுப் பெண்ணிற்கு திருமணம் நிச்சய மாகி இருந்தது.ஜாதக்பபொறுத்தம், நாள், நட்சத்திரம் எல்லாம் முறையாகப்பார்த்து பெரியோர் களால்நிச்சயிக்கபட்ட அரேன்ஞ்ட் மேரேஜ்தான். பெண்ணின் பெற்றோர் தோஹா(கத்தார்) ரில் 25 வருடங்களாக வேலை பார்த்து வந்தவர்கள்.தங்களொரே பெண்ணின் திருமணத்தை ஆசை, ஆசை யாக வெகு சிறப்பாக நடத்தனும்என்று பார்த்துப், பார்த்து எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தனர்.

Monday, March 21, 2011

Monday, March 21, 2011

மும்பை டு கோவா.(3)



சாயங்காலம் 6 மணிக்கு குழந்தைகளும், ஆண்களும் ஹோட்டலின் பின் புறம்

இருந்த ஸ்விம்மிங்க் பூல் போனார்கள்.லேடீசுக்கு தனியாக டைம் ஒதுக்கி

இருந்தார்கள். அதனால் லேடிஸ் எல்லாருமே அங்கு போட்டிருந்த ஈசி சேரில்

உக்காந்து அரட்டை அடிச்சுண்டு இருந்தோம். சூழ் நிலையே மிகவும் ரம்யமாக

இருந்தது.6 டு 9 வரை நீச்சல் குளியலெல்லாம் முடிந்து கரைஏறினார்கள்.அடுத்து

பசிதானே. நீச்சல் குளத்தைசுற்றிவர டேபிள் சேர் எல்லாம் போட்டு டின்னரும்

அங்கேயே கொண்டு தந்தார்கள்.சூடு, சூடாக பரோட்டா ஆலு பாஜி தால் ரைஸ்

என்று அமர்க்களமான சாப்பாடு. திரும்ப ரூம் கொஞ்ச நேரம்டி.வி.11மணிதூக்கம்.

Tuesday, March 15, 2011

Tuesday, March 15, 2011

மும்பை டு கோவா.(2)

மறு நாள் காலை பீச் போகாமல் ஒரு கால் டாக்சி புக் பண்ணி ஊர் சுத்தி
பாக்க கிளம்பினோம்.ரூம்லெயே குளித்து கரக்டாக 8 மணிக்கு கிளம்பினோம்
பெரிய டூரிஸ்ட் ப்ளேஸ்னு சொல்ராங்க. ஊர் அப்படி ஒன்னும் சுத்தமாவே
 இல்லை. திரும்பின பக்கமெல்லாம் கடல்தான். மீன் பிடிக்கும் வலைகளை
பக்கம் பக்கமா காய வைத்திருந்தார்கள். ஊர் பூராவும் மீன் நாத்தம் தாங்கலை.
ஒரு ஃப்ரெண்ட் ஃபேமிலி பெங்காலிக்காரா. அவங்களைப்பொறுத்தவரை மீன்
வெஜிடேரியனாம். அவங்க கல்யாணங்களில் கூட முதல் பூஜை மறியாதை
 பெரிய மீனுக்குத்தான் செய்வார்களாம்.

Friday, March 11, 2011

Friday, March 11, 2011

மும்பை டு கோவா.(1)

கொஞ்ச நாட்கள் முன்பு நாங்கள் நண்பர்கள்10 பேர்கள் மும்பைலேந்து கோவா
சுற்றுலா ஒரு வாரத்திற்கு போய் வந்தோம். இரவு12 மணிக்கு சத்ரபதி சிவாஜி
டெர்மினசிலிருந்து ட்ரெயினில்போனோம்.குழந்தைகள் 4 பேர், பெரியவர்கள்
6 பேர்.3 டயர் ஸ்லீப்பரில் புக் பண்ணியிருந்தார்கள்.வண்டி சரியான நேரத்தில்
 கிளம்பியது.இரவு நேரம் ஆதலால் அவரவர்கள் சீட்டில் ஏறி படுத்து விட்டோம்.
ரயிலின் சுகமான தாலாட்டில் இயற்கையான காற்றி சுகத்தில் எல்லாருமே
நன்கு தூங்கினோம்.

Tuesday, March 1, 2011

Tuesday, March 1, 2011

இந்தியன்.



இந்தியன்.

இந்தாப்பா, சர்வர், அந்தஃபேனைப்போடுப்பா. அப்பாடா என்ன வெய்யில், என்ன வெயில்.ஃபேனில் இருந்து வீசிய காற்றுக்கூட அனலாக தகித்தது. ஷர்ட்டின் முதல் பாட்டனைதளர்த்திக்கொண்டு,காலரை பின்னுக்குத்தள்ளிக்கொண்டுசேரில் சௌகரியமாகச்சாய்ந்து
கொண்ட அந்த நாகரீக பணக்கார மனிதர்களும், சர்வர், ஜில்லுனு என்னப்பா இருக்குஎன்றனர்.

Wednesday, February 23, 2011

Wednesday, February 23, 2011

குக் ”ஜி” & பேடாகாட்(எண்ட்)




குக் ”ஜி” & பேடாகாட்






சீக்கிரமே ஆபீசுக்கு கிளம்பி போனான் கோபு. கிரிஜாவும் எதுவுமே

 தோன்றாமல் கிச்சனில் வந்து உக்காந்தா. என்னம்மா ஆச்சு என்று

 நாராயன் கேக்கவும் கண்களில் கண்ணீர் வழியுதே தவிர வாயிலேந்து

 வார்த்தையே வரலை. 10 மணிக்கு திரும்பவும் கோபு வீட்டுக்கு வந்தான்.

 நாராயனிடம் நேற்று நடந்த சம்பவங்களை ஹிந்தியில் விவரமாக சொன்னான்.

 எனக்கு லஞ்ச் வேணாம், நாங்க நாலுபேரு ஜபல்பூர் ஆஸ்பிடல் ப்போயி 

குழந்தைஎப்படி இருக்குன்னு பாக்கப்போயிட்டு இருக்கோம். 

அதுசொல்லிட்டுப்போலாம்னுதான்இப்ப வந்தேன். என்ரான் நாராயன் ஜி யும் 

எல்லாவற்றையும் கேட்டு பிரமிச்சுப்போனார்.

 சாப் அதுக்காக நீங்க ஏன் சாப்பிடாம போகனும். 10 நிமிஷத்ல ஏதானும் ரெடி 

பண்ணிடரேன்சாப்பிட்டே கிளம்புங்க. அப்புரம் சாப், ஒன்னு சொல்ரேன் தப்பா 

நினைக்காதீங்க. சந்தோஷமா

 பிக்னிக்குனு கிளம்பினவங்கதானே அவங்களும், கையில போதுமான பணம் 

இருக்குமோ இல்லியோ நீங்க நாலு பேரும் உங்களால முடிஞ்ச் அளவு பணம் 

கொடுத்தா, நல்லா இருக்கும்.என்று தயங்கியபடியே சொன்னார். குட் ஐடியா 

நாராயன் ஜி, எனக்குத்தோனவே இல்லியே.

 கண்டிப்பா கொடுக்கரோம். சரியான சமயத்தில் நினைவு படுத்தினீங்க. நன்றி நாராயன் ஜி.



அவசர்மாக லஞ்ச் ரெடிபண்ணி கோபுவை சாப்பிட வைத்தார்.கிரிஜாவிடமும் 

சொல்லிக்கொண்டுகிளம்பினான் கோபு. ஏங்க நா, சோன்னதையும் கொஞ்சம் 

நினைவு வச்சுக்கோங்க, என்றாள்,கிரிஜா.


ஆகட்டும்மா. என்று கோபு கிளம்பினான். நாராயன், கிரிஜாவை 

சமாதானப்படுத்தும் விதமாக பேசினார்.


பிறகு அவள் பெட்ரூம் போயி படுத்துட்டா.5 மணி கோபு திரும்ப வந்தான். 

குழந்தை எப்படி இருக்குன்னுநாராயன், கிரிஜா இருவரும் ஒரே சமயத்தில் 

கேட்டார்கள். சரியான நேரத்துல கூட்டினு போயிட்டோம்

 இல்லியா. இப்ப ஓ. கே தான். ஆனா கால் போனது போனதுதான். குழந்தை 

உசிரோட கிடைச்சுதேஅதை நினைச்சு சமாதானபடுத்திக்க 

வேண்டியதுதான்.என்ரான். நாராயன் சாய், பிஸ்கெட் கொண்டுவந்தார்.

 அதைக்குடித்தவாரே, தன் பேக்கிலிருந்து ஒருபுது செல்போன் எடுத்து 

கிரிஜாவிடம் கொடுத்தான்.

  நாராயன் ஜி இங்க வாங்க, என்று கூப்பிட்டு அவர்கையில் 

செல்போனைக்கொடுத்தாள். என்னம்மாஎன்றார். உங்களுக்குத்தான். 

வாங்கிக்கோங்க என்றாள். ஐயோ எனக்கா?இதெல்லாம் எதுக்கும்மா?

    இதை எப்படி யூஸ்பண்ணனும்னெல்லாம் எனக்குத்தெரியாதும்மா. என்றார்.



நாராயன் ஜி நாங்க வந்தன்னிலேந்து எங்களை எவ்வளவு அன்பா பாத்துப்பாத்து 

கவனிச்சுக்கிட்டிங்கஎங்களுக்கும் , உங்களுக்கு ஏதானும் கொடுக்கணும்போல 

இருந்தது. என்ன கொடுப்பதுன்னு புரியலை.


நீங்க குடும்பத்தை விட்டுப்பிரிஞ்சு தனியா இருக்கீங்க. கெஸ்ட் ஹவுசிலுள்ள் 

போன் வெரும் ஆபீசுக்குமட்டுமே பேச முடியும். 10, 15, நாளுக்கு 

ஒருமுறைலெட்டர்மூலமாத்தானே மனைவி கூட பேசரீங்க.

     இனிமேல வாரம் ஒரு முறையாவது மனைவி, மகன்களின் 

குரலைஇக்கேக்கலாம். போபால்ல போன்இருக்கா? என்றாள். ஏதும்மா 

அதெல்லாம் பக்கத்துக்கடைலெ இருக்கு போயி சொல்வாங்க. என்ரார்.

      நம்பர் இருக்கா என்று கேட்டாள் கிரிஜா. ஆமாம்மா, என்று நம்பர் சொன்னார், 

உடனே அந்த நம்பர்போட்டு அவரைப்பேசச்சொன்னா. பையா, நா நாராயன், 

ஜபல் பூர்லேந்து பேசரேன் ரீமா வைக்கொஞ்சம் கூப்பிட முடியுமா, நா 5 நிமிஷம் 

கழிச்சுக்கூப்பிடரேன் என்றார்.போனைக்கட் செய்து

            மிகவும் பரபரப்புடன் கானப்பட்டார். நாராயன் ஜி என்னாச்சு? என்று கிரிஜா       

கேக்கவும், ஒன்னு


மில்லைமா இதுவரை மனைவியுடன் போன்ல்ல பேசினதே இல்லே.அதான் 

என்றார்.5 நிமிடங்களுக்குப்பிறகு அந்த நம்பர் கூப்பீடதும் கடைக்காரரே எடுத்து 

நாராயன் உங்க மனைவி வந்துட்டாஅவகூட பேசுங்க என்று அவளிடம் 

கொடுத்தார்போனை.மனைவியின் குரல் கேட்டதும் நாராயன்

           உடைந்து போயி அழவே ஆரம்பித்துவிட்டார்.





    அழுகையின் ஊடே இருவரும் 10 நிமிடங்கள் பேசினதும் போனைக்கட் 

பண்ணினார்.சாப், மேம் சாப் நீங்க எனக்கு மிகப்பெரிய உதவிசெய்திருக்கீங்க, 

போன்ல என் பீவி கூட போன்லலாம் பேசுவேன்னு நினைச்சுக்கூட 

பாத்ததில்லைமா.எனக்கு எப்படிநன்றி சொல்லனும்னே தெரியலை. என்று 

ரொம்பவே உணர்ச்சி வசப்பாடு பேசினார்.

                  கிரிஜா அவரை உக்காத்தி வச்சு போனை எப்படி உபயோகப்படுத்தனும், 

எப்படி சார்ஜ்பண்ணனும் என்று 

விவரமாகச்சொல்லிக்கொடுத்தாள்.கவனமாகக்கேட்டு மனதில் பதிய


வைத்துக்கொண்டார்.அடுத்தவாரம்கோபுகிரிஜாநாக்பூர்கிளம்பினார்கள்.னாராய

ன் ஜி எங்களுக்கும் 10 நாளுக்கு ஒரு முறை போன் பண்ணுங்க. நாங்களும் 

பண்ரோம்.என்றுவழியில் ட்ரெயினில் அவர்களுக்கு சாப்பாடு ஸ்னாக்ஸ் என்று 

தாராள்மாகச்செய்துகொடுத்தார். நாராயன் ஜி முடிஞ்சா ஒரு முறை நாக்பூர் 

வாங்க என்று கோபு சொன்னான்.


பிரிய முடியாமல் நாராயன் ஜி கிரிஜா, கோபு எல்லார் கண்களுமே கலங்கி இருந்தன.


Sunday, February 20, 2011

Sunday, February 20, 2011

குக் ”ஜி’ & பேடாகாட்

குக் ”ஜி” & பேடாகாட்

அடுத்து, படகுக்காரர் செய்தகாரியம் எங்க எல்லாருக்குமே குலை
நடுக்கத்தைக்கொடுத்தது. தன் இடுப்பிலிருந்து ஒரு பெரிய பட்டாக்
கத்தியை எடுத்து குழந்தையின் காலை, கண்ணிமைக்கும் நேரத்தில்
வெட்டி விட்டார். வெட்டுப்பட்ட பகுதியைக்கவ்விக்கொண்டு முதலை
நதியின் ஆழ்த்துக்குச்சென்று விட்டது. எல்லாரும் என்னை மன்னிக்கனும்.
எனக்கு வேறு வழி தெரியலை. நா இப்படி செய்யலைன்னா முதலை குழன்
தையை இழுத்துக்கொண்டு போய் விடும்மா. அதுக்கு தண்ணீல அசுரபலம்
உண்டு. நம்ம யாராலயும் எதுவும் பண்ணமுடியாதம்மா.இப்ப குழந்தை உங்க
ளுக்கு உயிரோட கிடைக்கனும்னா இதைத்தவிர வேர வழியே இல்லைம்மா. என்றுதன்னிலை விளக்கமும் கொடுத்தார். அவர்சொல்வது உண்மைதான். குழந்தை வீல்வீல்னு கதரி அழுவதைப்பார்க்கவே சகிக்கலை. அதற்குமேல் அதன் பெற்றோர் பிரமைபிடித்தது போல உக்காந்திருந்தனர்.