Sunday, December 26, 2010

Sunday, December 26, 2010

ஹிமாச்சல் பிரதேஷ்(4)

ஹிமாச்சல்ப்ரதெஷ்(பகுதி-4)

டல்ஹௌஸி 5மலைகளின் மேலே கட்டப்பட்டிருக்கு.katlog, patreyn, tehra, bakroda, and, balun.
19-வதுசெஞ்சுரி கவர்னர் ஜெனரல் லார்ட் டல்ஹௌஸி. அவர் இங்கு அடிக்கடி இங்கு
வந்து தங்கியதால், அவரின் ஞாபகார்த்தமாக, இந்த இடத்திற்கு அவரின் பெயரைவைத்திருக்கிறார்கள். கடல் மட்டத்திலிருந்து 2036 மீட்டர் உயரத்தில் உள்ளது. பைன்,ஓக், தியோதர்ஸ் மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. rhododendron என்ற பூக்களின் தோட்டமும்நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.ரவி என்கிறபெயரில் ஒரு பெரிய நதி டல்ஹௌஸியைச்சுற்றி
வெள்ளியை உருக்கி வார்த்ததுபோல வளைந்து, நெளிந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. பனி மூடியdhauladhar மலைகள் வேறு திரும்பிய பக்கமெல்லாம். டெல்லியிலிருந்து485 கிலோமீட்டர்,ரோட்ஸைட்டில்
சாம்பாவிலிருந்து 52கிலோமீட்டர், 80கிலோமீட்டரில் பதான்கோட். ஏர்போர்ட் gaggal,,in,kangraa 135கிலோமீட்டரில்.இங்கேருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் சுபாஷ்போலி என்று ஒரு இடம். 1937-ல்
சுபாஷ் சந்த்ரபோஸ் இங்கு, அடிக்கடி தங்குவதுண்டாம். மெடிடேஷனுக்கு பெஸ்ட் ப்ளேஸாம்.காந்திசௌக் என்னுமிடத்தில் அழக்ழகான சர்ச்சுகள் இருக்கிறது. ஷாப்பிங்க்செண்டரில்திபேத்தியர்களின் கைவண்ணத்தில் உருவான ஃபுலோவர், கார்பெட், சம்பா ஸ்பெஷல் ஸ்லிப்பர்ஸ்,ஷால்,
க்ளௌஸ், சாக்ஸ் என்று கம்பளி உடைகள் நிறைய கிடைக்கின்றன.
நான்7 மணிக்கு எழுந்தேன்.ரூம் ஹீட்டர் இர்ந்தாலும்கூட ரொம்பவே குளிறாகத்தான் இருந்தது.

Monday, December 20, 2010

Monday, December 20, 2010

ஹிமாச்சல் பிரதேஷ்(3)

                                                             

ஹிமாச்சல் ப்ரதேஷ்( பகுதி-3)

எல்லாருக்கும் ஒரே இடத்தில் தங்க இடம் கிடைக்கலை. நானும் 2 குழந்தைகளும்முதல் மாடி வராண்டாவில், பாக்கி எல்லாரும் 2வது, 3வது மாடி வராண்டாக்களில்கிடைத்த இடங்க்ளில் மூட்டையாக சுருண்டு கொண்டோம். அந்த நேரத்திலும்குளிரிலும் தூக்கம் வரலை. வராண்டா ஓரமாக நின்று வெளியில் வேடிக்கை பார்த்துண்டு இருந்தேன். அந்த முழு நிலா ஒளியில் பெயர்தெரியாத பெரிய,பெரிய மரங்கள்எல்லாம் தக,தக என்று ஜொலித்துக்கொண்டிருந்தன. 3மனிவரையிலும் பார்த்துட்டு
வராண்டாவில் குழந்தைகள் கிட்ட உக்காந்தேன். வராண்டா பூராவும் கால்வைக்க இடமில்லாமல் அதனை ஜனங்கள்கம்பளிக்குள் சுருண்டிருந்தார்கள். எனக்கு படூக்க எல்லாம் இடமில்லை. சுவரில் சாய்ந்து காலை கம்பளிக்குள் நீட்டிண்டு உக்காந்தேன்.4மணிக்கு லேசா
கால் வலிக்க ஆரம்பிச்சுடுத்து. நான் எப்பவுமே பெயின்பாம் எல்லாம் கையோட கொண்டுபோயிடுவேன். கால்கட்டை விரலில் ஆரம்பித்து மெள்ள, மெள்ள முட்டி வரை விரு,விருஎன்று வலி ஏற ஆரம்பித்து விட்டது. வலி மட்டும் ஆரம்பித்து விட்டால் என்னை ஒரு வழிபண்ணிடும். அதுவும் இன்று ரொம்பவே ஸ்டெயின் பன்ணிண்டு 14கிலோ மீட்டர் ஏறி வந்து
காலுக்கு ரொபவே வேலை கொடுத்திருக்கேன். அது என்னை சும்மா விடுமா?வலி ஆரம்பித்துவிட்டால் நிக்கவோ, படுக்கவோ முடியவேமுடியாது.

Tuesday, December 14, 2010

Tuesday, December 14, 2010

ஹிமாச்சல்பிரதேஷ்(2)

                                                                      ஹிமாச்சல் ப்ரதேஷ். (பகுதி-2.)

மலை அடி வாரத்திலேயே தடிக்கம்பு விற்கிறார்கள். ஆளுக்கு ஒரு கம்பு வாங்கிண்டோம்.ஏற்றப்பாதை இல்லையா கம்பை சப்போர்ட்டுக்கு ஊனிண்டு ஏறலாமே. எல்லாருமே கீழேகம்பு வாங்கிண்டு தான் மலை ஏறுகிறார்கள். நம்மலக்கேஜை சுமப்பதற்கும் கூலி ஆட்கள்கிடைக்கிறார்கள்.4மணிக்கு மலை ஏற ஆரம்பித்தோம்.அகல,அகலமாக படிக்கட்டுகள் கட்டி,
தலைக்கு மேலே தகரத்தினால் கூரையும் போட்டு நல்ல வசதிகள் செய்திருந்தார்கள். மலைஏறுவதுபோலவே இல்லை. ஜாலியாக சிரிச்சு பேசிண்டு தான் ஏற ஆரம்பித்தோம். ஒரொருகிலோமீட்டருக்கும், ஒரு செக் போஸ்ட் வைத்திருக்கா. மெட்டல் டிடெக்டர் கொண்டு எல்லாரையும் செக் பண்ணிதான் மேற்கொண்டு செல்லவே அலவ் பண்ணறா.அப்படியும் இப்படியுமா3 கிலோமீட்டர் வ்ரையும் ஏறிட்டோம். அதுவரை எந்த சிரமமும் தெரியலை.பாதையின் இரண்டுபுரமும், சின்ன,சின்ன கடைகள். பூரா,பூராவும் பாதாம், பிஸ்தா,அக்ரூட்,முந்திரி, பேரீச்சை கிஸ்மிஸ் என்று எல்லாமே ட்ரைஃப்ரூட்ஸ் தான். நாங்கள் எதுவும் வாங்கலை. அந்த வெயிட்டையும்
சுமந்துண்டு எப்படி மலை ஏறமுடியும்?. ஆனா குஜராத்திக்காரா கொஞ்சம்கூட யோசிக்கவே இல்லஎல்லாவற்றிலும் 5, 5 கிலோ வாங்கிண்டா.சுமைதூக்கும் கூலிகளையும் அவர்கள் ஏற்பாடு பண்ணிண்டா.எங்களிடம் என்ன் நீங்க எதுவுமே வாங்கலை, நாம மும்பைல 100 க்ராமுக்கு கொடுக்கற விலையில்
இங்க 1 கிலோ வாங்கிடலாம்.அவ்வளவு சீப் ரேட். அதுவும் தவிர நாங்க எல்லாம் காலை ப்ரேக்பாஸ்ட்டுடன் டெய்லி ஒரு பிடி ட்ரை ஃப்ரூட்ஸ்ம் எடுத்துப்போம். நீங்க எல்லாம் ட்ரைஃப்ரூட்ஸ் சாப்பிடவே
மாட்டீங்களா என்று கேள்வி வேறு கேக்கறா. பொதுவா நம்மள்ள பலபேரு விசேஷ தினங்களில்பாயசமோ, ஸ்வீட்டோ பண்ணினா அதில் கொஞ்சம் முந்திரி,த்ராட்சை நெய்ல வறுத்துபோடுவோம்.தீபாவளிசமயம்னா, பாதாம் அல்வாவோ,வேறு எதுவுமோ ஸ்வீட்பண்ணும் போதுதான் இந்தமாதிரி
ட்ரைஃப்ரூட்ஸ்களை யூஸ் பண்ணறோம். இந்தபக்கம்லாம் சிலபேரு, குழந்தைகளுக்கு காலை டிபனுடன் 2பாதாம், 2பிஸ்தா என்று கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் போல தினசரி

Thursday, December 9, 2010

Thursday, December 9, 2010

ஹிமாச்சல் பிரதேஷ்(1)

சிரியா கட்டுரையை படிக்கும்போதே நான் போய் வந்த சில வெளி நாடுகளைப்
பற்றி எழுதி அனுப்ப எனக்கும் மிக ஆர்வமாக இருக்கிறது. அவங்களை மாதிரி
அவ்வளவு தெளிவா எழுத வருமா, சந்தேகம்தான்.(புலியைப்பார்த்து பூனையும்
சூடுபோட்டுக்கொள்கிறதது.)
நம்ம ஸௌத்திலேயே பார்த்து ரசிக்க நிரைய இடங்கள் எவ்வளவு இருக்கு.
நான்முதலில் என் ஹிமாச்சல் ப்ரதேச சுற்றுலா விலிருந்து ஆரம்பிக்கிரேன்.
இது வெற்றிகரமாக எழுதி முடித்தால், ஆப்ரிக்கா,சிங்கப்பூர், ஹாங்காங்க்,
ஜப்பான் சுற்றுலாக்கள்பற்றி எழுதலாம் என்றிருக்கிரேன்.