Tuesday, March 15, 2011

Tuesday, March 15, 2011

மும்பை டு கோவா.(2)

மறு நாள் காலை பீச் போகாமல் ஒரு கால் டாக்சி புக் பண்ணி ஊர் சுத்தி
பாக்க கிளம்பினோம்.ரூம்லெயே குளித்து கரக்டாக 8 மணிக்கு கிளம்பினோம்
பெரிய டூரிஸ்ட் ப்ளேஸ்னு சொல்ராங்க. ஊர் அப்படி ஒன்னும் சுத்தமாவே
 இல்லை. திரும்பின பக்கமெல்லாம் கடல்தான். மீன் பிடிக்கும் வலைகளை
பக்கம் பக்கமா காய வைத்திருந்தார்கள். ஊர் பூராவும் மீன் நாத்தம் தாங்கலை.
ஒரு ஃப்ரெண்ட் ஃபேமிலி பெங்காலிக்காரா. அவங்களைப்பொறுத்தவரை மீன்
வெஜிடேரியனாம். அவங்க கல்யாணங்களில் கூட முதல் பூஜை மறியாதை
 பெரிய மீனுக்குத்தான் செய்வார்களாம்.



என்னைப்போலப்யூர்வெஜிடேரியனுக்குஇந்தநாத்தம்பொறுத்துக்கொள்ளமுடியாத
ஒரு அவஸ்தைதான்.கார்க்காரன் இது என்ன இடம் ,இது என்ன இடம் என்று சொல்லிக்கொண்டே வந்தான். எல்லாபக்கங்களிலும் குட்டி கேரளாவை நினைவு
படுத்தும் வண்ணம் தென்னை,வாழை, பாக்கு மரங்கள் நிறைய இருக்கு. ஒரு
சில பலா மரங்கள்கூட கண்ணில் பட்டது. முதலில் சில அம்மன்கோவில் போனோம். நல்லா பராமறிக்கிரார்கள். அங்கேந்து ஒரு சர்ச். திரும்பின பக்கமெல்லாம் சர்ச்தான் நிறைய இருக்கு. கொங்கன் காரா, கத்லிக் கிறிஸ்டியன்
மெஜாரிட்டியா இருக்கா.ஊரை சுத்திபாக்கஒன்னுமே இல்லைபோலதானிருக்கு.

மத்யான லஞ்சுக்கு ” ப்ளாடைன்லீவ்” என்னும் ஹோட்டல்போனோம். அது ஒன்னுதான் பாக்க நல்லா இருந்தது.எல்லாருமே ”தாலி” தான் ஆர்டர் பண்ணினோம். சாப்பாடெல்லாம் ஓ, கே தான். இந்தமீன் நாத்தம் போகும் இடமெல்லாம் தொர்ந்து வந்து தொந்திரவு பண்ணிண்டே இருந்தது.
சாப்பிட்ட பிறகு எல்லாரும் ஒரு ஐஸ்க்ரீம் எடுத்துண்டுஒரு பீச் போனோம்.
அங்குஒரு பெரிய போட்டில் ரெண்டுதளம் இருக்கு. மேல் தளத்தில் 100 ப்ளாஸ்டிக் சேர்போட்டிருந்தார்கள். ஒரு பெரிய மேடையும் இருந்தது.
ஒரு ஆளுக்கு100 ரூபா டிக்கட் வாங்கிண்டு அந்தபோட்டில் பொய் உக்காந்தோம்.
 எல்லா சேரும் நிறம்பிய பிறகுதான் ப்ரோக்ராம் ஆரம்பிப்பார்களாம். கொஞ்ச நேரம் வேடிக்கைதான். ஒருமணி நேரத்தில் ன்கூட்டம் சேர ஆரம்பித்தது.கடலில்
மெதுவாக நீந்திசெல்வதுபோல போட் ஆடி, ஆடி சென்றது. மேடையில் கொங்கணிக்கார ஆர்ட்டிஸ்ட்கள் டான்ஸ் பாட்டு, அவர்களின் பாரம்பரிய கலை
கள் என்று ஆடிப்பாடி எல்லாரையும் உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள்ஆட்டபாட்டம்ஆனதும்ஆடியன்ஸைகூப்பிட்டுபாடி,ஆடச்சொன்னார்கள். விருப்பமுள்ளவர்கள் ஆட்டம் பாட்டங்களில் கலந்து ஆடினார்கள். குழந்தைகளும் நல்லா ஆடி எஞ்சாய் பண்ணினார்கள். சுத்தி வர அலை அடிக்கும்
 கடல் தண்ணி மத்தியில் போட்டில் கும்மாளம் எல்லாருமே நல்லா எஞ்சாய்
 பண்ணினார்கள்.ஒன்னரை மணி நேரம் இந்த பொழுதுபோக்கு காட்டுகிரார்கள்.
திரும்ப கார் சவாரி. நேரா ஹோட்டல் ஜெர்மனி.அப்பாடான்னு படுக்கைல விழு ந் தோம்.

8 comments:

ம.தி.சுதா said...

////என்னைப்போலப்யூர்வெஜிடேரியனுக்குஇந்தநாத்தம்பொறுத்துக்கொள்ளமுடியாத
ஒரு அவஸ்தைதான்////

அட இப்புடி ஒண்ணு கூட இருக்கிறதோ....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

கோலா பூரி. said...

என்னங்க, ம. தி. சுதா, இப்படி கேட்டுட்டீங்க?

தமிழ்வாசி பிரகாஷ் said...

///மீன்
வெஜிடேரியனாம்./// அப்படியா? இப்படியே போனா எல்லா அசைவமும், சைவமாக மாறிரும் போல....அப்படித்தானே!

எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

எல் கே said...

மேற்கு வங்கத்தில் அனைவரும் மீன் சாப்பிடுவார்கள்..

பழக்கம் இல்லாட்டி மீன் நாற்றம் கஷ்டம்தான்

கோலா பூரி. said...

தமிழ் வாசி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

கோலா பூரி. said...

கார்த்தி வருகைக்கு நன்றி. இதை எல்லாம் எதுக்குங்க பழகிக்கனும்? அம வாசை, பௌர்ணமி வெள்ளி சனியில்
வெங்காயம் கூட சேத்துக்காத ப்யூர் வெஜிடேரியன் நாங்க.

எல் கே said...

//அம வாசை, பௌர்ணமி வெள்ளி சனியில்
வெங்காயம் கூட சேத்துக்காத ப்யூர் வெஜிடேரியன் நாங்க.//

நானும்தான். ஆனால் அலுவலக வேலைக் காரணமாக பக்கத்தில் இருப்பவர் நான்-வெஜ் சாப்பிட்டாலும் பொறுத்துதான் ஆக வேண்டும்

கோலா பூரி. said...

வேலைக்குச்செல்பவர்களுக்கு வேனும்னா அது பழக்கமா இருக்கலாம் வீட்டில் இருப்பவர்களுக்கு இது கொஞ்சம் கஷ்டம்தான்.