Sunday, March 27, 2011

Sunday, March 27, 2011

மெஹந்தி பார்ட்டி



திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் மறக்க முடியாத பரவச நிகழ்வுதான்.சமீபத்தில் என் உறவினர் வீட்டுப் பெண்ணிற்கு திருமணம் நிச்சய மாகி இருந்தது.ஜாதக்பபொறுத்தம், நாள், நட்சத்திரம் எல்லாம் முறையாகப்பார்த்து பெரியோர் களால்நிச்சயிக்கபட்ட அரேன்ஞ்ட் மேரேஜ்தான். பெண்ணின் பெற்றோர் தோஹா(கத்தார்) ரில் 25 வருடங்களாக வேலை பார்த்து வந்தவர்கள்.தங்களொரே பெண்ணின் திருமணத்தை ஆசை, ஆசை யாக வெகு சிறப்பாக நடத்தனும்என்று பார்த்துப், பார்த்து எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தனர்.

Monday, March 21, 2011

Monday, March 21, 2011

மும்பை டு கோவா.(3)



சாயங்காலம் 6 மணிக்கு குழந்தைகளும், ஆண்களும் ஹோட்டலின் பின் புறம்

இருந்த ஸ்விம்மிங்க் பூல் போனார்கள்.லேடீசுக்கு தனியாக டைம் ஒதுக்கி

இருந்தார்கள். அதனால் லேடிஸ் எல்லாருமே அங்கு போட்டிருந்த ஈசி சேரில்

உக்காந்து அரட்டை அடிச்சுண்டு இருந்தோம். சூழ் நிலையே மிகவும் ரம்யமாக

இருந்தது.6 டு 9 வரை நீச்சல் குளியலெல்லாம் முடிந்து கரைஏறினார்கள்.அடுத்து

பசிதானே. நீச்சல் குளத்தைசுற்றிவர டேபிள் சேர் எல்லாம் போட்டு டின்னரும்

அங்கேயே கொண்டு தந்தார்கள்.சூடு, சூடாக பரோட்டா ஆலு பாஜி தால் ரைஸ்

என்று அமர்க்களமான சாப்பாடு. திரும்ப ரூம் கொஞ்ச நேரம்டி.வி.11மணிதூக்கம்.

Tuesday, March 15, 2011

Tuesday, March 15, 2011

மும்பை டு கோவா.(2)

மறு நாள் காலை பீச் போகாமல் ஒரு கால் டாக்சி புக் பண்ணி ஊர் சுத்தி
பாக்க கிளம்பினோம்.ரூம்லெயே குளித்து கரக்டாக 8 மணிக்கு கிளம்பினோம்
பெரிய டூரிஸ்ட் ப்ளேஸ்னு சொல்ராங்க. ஊர் அப்படி ஒன்னும் சுத்தமாவே
 இல்லை. திரும்பின பக்கமெல்லாம் கடல்தான். மீன் பிடிக்கும் வலைகளை
பக்கம் பக்கமா காய வைத்திருந்தார்கள். ஊர் பூராவும் மீன் நாத்தம் தாங்கலை.
ஒரு ஃப்ரெண்ட் ஃபேமிலி பெங்காலிக்காரா. அவங்களைப்பொறுத்தவரை மீன்
வெஜிடேரியனாம். அவங்க கல்யாணங்களில் கூட முதல் பூஜை மறியாதை
 பெரிய மீனுக்குத்தான் செய்வார்களாம்.

Friday, March 11, 2011

Friday, March 11, 2011

மும்பை டு கோவா.(1)

கொஞ்ச நாட்கள் முன்பு நாங்கள் நண்பர்கள்10 பேர்கள் மும்பைலேந்து கோவா
சுற்றுலா ஒரு வாரத்திற்கு போய் வந்தோம். இரவு12 மணிக்கு சத்ரபதி சிவாஜி
டெர்மினசிலிருந்து ட்ரெயினில்போனோம்.குழந்தைகள் 4 பேர், பெரியவர்கள்
6 பேர்.3 டயர் ஸ்லீப்பரில் புக் பண்ணியிருந்தார்கள்.வண்டி சரியான நேரத்தில்
 கிளம்பியது.இரவு நேரம் ஆதலால் அவரவர்கள் சீட்டில் ஏறி படுத்து விட்டோம்.
ரயிலின் சுகமான தாலாட்டில் இயற்கையான காற்றி சுகத்தில் எல்லாருமே
நன்கு தூங்கினோம்.

Tuesday, March 1, 2011

Tuesday, March 1, 2011

இந்தியன்.



இந்தியன்.

இந்தாப்பா, சர்வர், அந்தஃபேனைப்போடுப்பா. அப்பாடா என்ன வெய்யில், என்ன வெயில்.ஃபேனில் இருந்து வீசிய காற்றுக்கூட அனலாக தகித்தது. ஷர்ட்டின் முதல் பாட்டனைதளர்த்திக்கொண்டு,காலரை பின்னுக்குத்தள்ளிக்கொண்டுசேரில் சௌகரியமாகச்சாய்ந்து
கொண்ட அந்த நாகரீக பணக்கார மனிதர்களும், சர்வர், ஜில்லுனு என்னப்பா இருக்குஎன்றனர்.

Wednesday, February 23, 2011

Wednesday, February 23, 2011

குக் ”ஜி” & பேடாகாட்(எண்ட்)




குக் ”ஜி” & பேடாகாட்






சீக்கிரமே ஆபீசுக்கு கிளம்பி போனான் கோபு. கிரிஜாவும் எதுவுமே

 தோன்றாமல் கிச்சனில் வந்து உக்காந்தா. என்னம்மா ஆச்சு என்று

 நாராயன் கேக்கவும் கண்களில் கண்ணீர் வழியுதே தவிர வாயிலேந்து

 வார்த்தையே வரலை. 10 மணிக்கு திரும்பவும் கோபு வீட்டுக்கு வந்தான்.

 நாராயனிடம் நேற்று நடந்த சம்பவங்களை ஹிந்தியில் விவரமாக சொன்னான்.

 எனக்கு லஞ்ச் வேணாம், நாங்க நாலுபேரு ஜபல்பூர் ஆஸ்பிடல் ப்போயி 

குழந்தைஎப்படி இருக்குன்னு பாக்கப்போயிட்டு இருக்கோம். 

அதுசொல்லிட்டுப்போலாம்னுதான்இப்ப வந்தேன். என்ரான் நாராயன் ஜி யும் 

எல்லாவற்றையும் கேட்டு பிரமிச்சுப்போனார்.

 சாப் அதுக்காக நீங்க ஏன் சாப்பிடாம போகனும். 10 நிமிஷத்ல ஏதானும் ரெடி 

பண்ணிடரேன்சாப்பிட்டே கிளம்புங்க. அப்புரம் சாப், ஒன்னு சொல்ரேன் தப்பா 

நினைக்காதீங்க. சந்தோஷமா

 பிக்னிக்குனு கிளம்பினவங்கதானே அவங்களும், கையில போதுமான பணம் 

இருக்குமோ இல்லியோ நீங்க நாலு பேரும் உங்களால முடிஞ்ச் அளவு பணம் 

கொடுத்தா, நல்லா இருக்கும்.என்று தயங்கியபடியே சொன்னார். குட் ஐடியா 

நாராயன் ஜி, எனக்குத்தோனவே இல்லியே.

 கண்டிப்பா கொடுக்கரோம். சரியான சமயத்தில் நினைவு படுத்தினீங்க. நன்றி நாராயன் ஜி.



அவசர்மாக லஞ்ச் ரெடிபண்ணி கோபுவை சாப்பிட வைத்தார்.கிரிஜாவிடமும் 

சொல்லிக்கொண்டுகிளம்பினான் கோபு. ஏங்க நா, சோன்னதையும் கொஞ்சம் 

நினைவு வச்சுக்கோங்க, என்றாள்,கிரிஜா.


ஆகட்டும்மா. என்று கோபு கிளம்பினான். நாராயன், கிரிஜாவை 

சமாதானப்படுத்தும் விதமாக பேசினார்.


பிறகு அவள் பெட்ரூம் போயி படுத்துட்டா.5 மணி கோபு திரும்ப வந்தான். 

குழந்தை எப்படி இருக்குன்னுநாராயன், கிரிஜா இருவரும் ஒரே சமயத்தில் 

கேட்டார்கள். சரியான நேரத்துல கூட்டினு போயிட்டோம்

 இல்லியா. இப்ப ஓ. கே தான். ஆனா கால் போனது போனதுதான். குழந்தை 

உசிரோட கிடைச்சுதேஅதை நினைச்சு சமாதானபடுத்திக்க 

வேண்டியதுதான்.என்ரான். நாராயன் சாய், பிஸ்கெட் கொண்டுவந்தார்.

 அதைக்குடித்தவாரே, தன் பேக்கிலிருந்து ஒருபுது செல்போன் எடுத்து 

கிரிஜாவிடம் கொடுத்தான்.

  நாராயன் ஜி இங்க வாங்க, என்று கூப்பிட்டு அவர்கையில் 

செல்போனைக்கொடுத்தாள். என்னம்மாஎன்றார். உங்களுக்குத்தான். 

வாங்கிக்கோங்க என்றாள். ஐயோ எனக்கா?இதெல்லாம் எதுக்கும்மா?

    இதை எப்படி யூஸ்பண்ணனும்னெல்லாம் எனக்குத்தெரியாதும்மா. என்றார்.



நாராயன் ஜி நாங்க வந்தன்னிலேந்து எங்களை எவ்வளவு அன்பா பாத்துப்பாத்து 

கவனிச்சுக்கிட்டிங்கஎங்களுக்கும் , உங்களுக்கு ஏதானும் கொடுக்கணும்போல 

இருந்தது. என்ன கொடுப்பதுன்னு புரியலை.


நீங்க குடும்பத்தை விட்டுப்பிரிஞ்சு தனியா இருக்கீங்க. கெஸ்ட் ஹவுசிலுள்ள் 

போன் வெரும் ஆபீசுக்குமட்டுமே பேச முடியும். 10, 15, நாளுக்கு 

ஒருமுறைலெட்டர்மூலமாத்தானே மனைவி கூட பேசரீங்க.

     இனிமேல வாரம் ஒரு முறையாவது மனைவி, மகன்களின் 

குரலைஇக்கேக்கலாம். போபால்ல போன்இருக்கா? என்றாள். ஏதும்மா 

அதெல்லாம் பக்கத்துக்கடைலெ இருக்கு போயி சொல்வாங்க. என்ரார்.

      நம்பர் இருக்கா என்று கேட்டாள் கிரிஜா. ஆமாம்மா, என்று நம்பர் சொன்னார், 

உடனே அந்த நம்பர்போட்டு அவரைப்பேசச்சொன்னா. பையா, நா நாராயன், 

ஜபல் பூர்லேந்து பேசரேன் ரீமா வைக்கொஞ்சம் கூப்பிட முடியுமா, நா 5 நிமிஷம் 

கழிச்சுக்கூப்பிடரேன் என்றார்.போனைக்கட் செய்து

            மிகவும் பரபரப்புடன் கானப்பட்டார். நாராயன் ஜி என்னாச்சு? என்று கிரிஜா       

கேக்கவும், ஒன்னு


மில்லைமா இதுவரை மனைவியுடன் போன்ல்ல பேசினதே இல்லே.அதான் 

என்றார்.5 நிமிடங்களுக்குப்பிறகு அந்த நம்பர் கூப்பீடதும் கடைக்காரரே எடுத்து 

நாராயன் உங்க மனைவி வந்துட்டாஅவகூட பேசுங்க என்று அவளிடம் 

கொடுத்தார்போனை.மனைவியின் குரல் கேட்டதும் நாராயன்

           உடைந்து போயி அழவே ஆரம்பித்துவிட்டார்.





    அழுகையின் ஊடே இருவரும் 10 நிமிடங்கள் பேசினதும் போனைக்கட் 

பண்ணினார்.சாப், மேம் சாப் நீங்க எனக்கு மிகப்பெரிய உதவிசெய்திருக்கீங்க, 

போன்ல என் பீவி கூட போன்லலாம் பேசுவேன்னு நினைச்சுக்கூட 

பாத்ததில்லைமா.எனக்கு எப்படிநன்றி சொல்லனும்னே தெரியலை. என்று 

ரொம்பவே உணர்ச்சி வசப்பாடு பேசினார்.

                  கிரிஜா அவரை உக்காத்தி வச்சு போனை எப்படி உபயோகப்படுத்தனும், 

எப்படி சார்ஜ்பண்ணனும் என்று 

விவரமாகச்சொல்லிக்கொடுத்தாள்.கவனமாகக்கேட்டு மனதில் பதிய


வைத்துக்கொண்டார்.அடுத்தவாரம்கோபுகிரிஜாநாக்பூர்கிளம்பினார்கள்.னாராய

ன் ஜி எங்களுக்கும் 10 நாளுக்கு ஒரு முறை போன் பண்ணுங்க. நாங்களும் 

பண்ரோம்.என்றுவழியில் ட்ரெயினில் அவர்களுக்கு சாப்பாடு ஸ்னாக்ஸ் என்று 

தாராள்மாகச்செய்துகொடுத்தார். நாராயன் ஜி முடிஞ்சா ஒரு முறை நாக்பூர் 

வாங்க என்று கோபு சொன்னான்.


பிரிய முடியாமல் நாராயன் ஜி கிரிஜா, கோபு எல்லார் கண்களுமே கலங்கி இருந்தன.


Sunday, February 20, 2011

Sunday, February 20, 2011

குக் ”ஜி’ & பேடாகாட்

குக் ”ஜி” & பேடாகாட்

அடுத்து, படகுக்காரர் செய்தகாரியம் எங்க எல்லாருக்குமே குலை
நடுக்கத்தைக்கொடுத்தது. தன் இடுப்பிலிருந்து ஒரு பெரிய பட்டாக்
கத்தியை எடுத்து குழந்தையின் காலை, கண்ணிமைக்கும் நேரத்தில்
வெட்டி விட்டார். வெட்டுப்பட்ட பகுதியைக்கவ்விக்கொண்டு முதலை
நதியின் ஆழ்த்துக்குச்சென்று விட்டது. எல்லாரும் என்னை மன்னிக்கனும்.
எனக்கு வேறு வழி தெரியலை. நா இப்படி செய்யலைன்னா முதலை குழன்
தையை இழுத்துக்கொண்டு போய் விடும்மா. அதுக்கு தண்ணீல அசுரபலம்
உண்டு. நம்ம யாராலயும் எதுவும் பண்ணமுடியாதம்மா.இப்ப குழந்தை உங்க
ளுக்கு உயிரோட கிடைக்கனும்னா இதைத்தவிர வேர வழியே இல்லைம்மா. என்றுதன்னிலை விளக்கமும் கொடுத்தார். அவர்சொல்வது உண்மைதான். குழந்தை வீல்வீல்னு கதரி அழுவதைப்பார்க்கவே சகிக்கலை. அதற்குமேல் அதன் பெற்றோர் பிரமைபிடித்தது போல உக்காந்திருந்தனர்.

Monday, February 14, 2011

Monday, February 14, 2011

குக் ”ஜி” & பேடாகாட்(4)



குக் ”ஜி” &பேடாகாட்                

சாய்குடிச்சுட்டு எல்லாரும் அங்கயே பெரிய போர்வையை விரித்துகொண்டு
கீழே உக்காந்துபேசிக்கொனிருந்தோம். அவரவர்கள் அறிமுகம், 2வயதில் ஒரு
குட்டிப்பையன்,எல்லாரிடமும் வேத்துமுகம் இல்லாமல் வந்து விளையாடிக்
கொண்டிருந்தான்.15வயதில் ஒருபையன், 10 வயதில் ஒரு பெண், 7 வயதில் ஒருபையன் என்று குழந்தைகள் ஒடிபிடிச்சு விளையாடிக்கொண்டிருந்தார்கள். நாங்கமார்பிள் ஷோபீஸ் எல்லாருமே நிறைய வாங்கினோம். ரொம்ப அழகாக இருந்தது.அப்படியும் இப்படியுமாக 9 மணீயே ஆச்சு.எல்லாருமே கையில் சாப்பாடு கொண்டுவந்திருந்தார்கள். டெம்போகாரர்களையும் எங்க கூட சாப்பிடக்கூப்பிட்டோம். ரொம்பசந்தோஷமாக வந்தார்கள். நாராயன் ஜி நல்ல தாராளமாகவே சாப்பாடு வைத்திருந்தார்.


Monday, February 7, 2011

Monday, February 7, 2011

குக் ”ஜி” & பேடாகாட்(3)



பேடாகாட்(3)                          

கோபுவும், கிரிஜாவும் கீழே கார்டன் போனார்கள்.உள்ளே நுழைந்ததுமே
கும் மென்ற வாசம் மூக்கைதுளைத்தது.மல்லி, அடுக்குமல்லி,பலகல்ர்களில்
ரோஜாக்கள், கனகாம்பரம்,செம்பருத்தி, இருவாட்சி என்று கலர்,கலராக வாசமிக்கமலர்கள். செடிகளையும் புதராக மண்ட விடாமல் நன்கு கட் செய்து நன்றாகபராமறித்திருந்தார்கள். உண்மைலயே மனதுக்கு இதமாகவே இருந்தது. சுற்றிவரஒரு சின்ன வாக் பண்ணிட்டு மேலே போனார்கள். நாராயன் ஜி தோட்டம் யாருபராமறிக்கிராங்க? ஏம்மா, சமையல் வேலை போக பாக்கி நேரங்களில் நாந்தாம்மாகவனிக்கரேன். என்றார். சூப்பரா பராமறிக்கிரீங்க நாராயன் ஜி. நீங்க எதுபண்ணினாலும்ஆத்மார்த்தமாகப்பண்ணுகிரீர்கள் அதுதான் எல்லாத்துலயும் ஒரு பர்பெக்‌ஷன் இருக்கு.
என்று பாராட்டாகச்சொல்லவும் அவர் மிகவும் சங்கோசப்பட்டார்.

Saturday, January 29, 2011

Saturday, January 29, 2011

குக் ”ஜி” & பேடாகாட்(2)



குக் ”ஜி” & பேடா காட்(2)




மறு நாள் கோபு காலை எழுந்து ஷேவ்பண்ணி குளித்து8-மணிக்குடைனிங்க்

ஹால் வந்தான்.கிரிஜாவும் கூடவே வந்தாள். நாராயன் ஜி நேற்று போலவே

ப்ரெட் டோஸ்ட் பண்ணி வெண்ணை தடவி,ஜாம் தடவி கொடுத்தார்.சாயும்

கொடுத்தார். 8.30-க்கு ஆபீசிலிருந்து கோபுவைக்கூட்டிப்போக கார் வந்தது.

கோபு கிளம்பி போனதும் கிரிஜா கிச்சனில் நாரயன் ஜியுடன் பெச்சுக்கொடுதுக்

கொண்டே வந்தாள். கிச்சனையும் சுத்தமாகவே வைத்திருந்தார். அவரையும்

டிபன் சாப்பிடச்சொன்னாள். அவரும் சாப்பிட்டு பாத்திரங்களை ஒழுத்து சிங்கில்போட்டுவிட்டு, மேம் சாப் லஞ்சுக்கு என்ன சாப்டுரீங்க?என்ரார். நாராயன் ஜி நீங்கஎதுபண்ணினாலும் ஓ. கே தான். என்றாள்.

Thursday, January 27, 2011

Thursday, January 27, 2011

குக் ”ஜி” & பேடாகாட். (1)

                     குக் ”ஜி”   &       பேடாகாட்.
  உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதியது இந்தக்கதை.

 கோபு,கிரிஜா மணமாகி 6-மாதங்களே ஆன புது தம்பதிகள். கோபு நாக்பூரில்
 வேலை பார்த்து வந்தான். கிரிஜா ஹௌஸ் ஒய்ஃப். கோபுவுக்கு ஆபீசில்
 ஒரு 10  நாட்களுக்கு டெபுடேஷனில் ஜபல்பூர் போகும்படி ஆர்டர் வந்தது,புதுமனைவியை எப்படி தனியாக விட்டுப்போவது என்று பெரிய ஆபீசரிடம்
 ரிக்வெஸ்ட் பண்ணீ அவளையும் கூட்டிப்போக பர்மிஷன் வாங்கினான்.இருவரும் கிளம்பி ஒரு விடி காலை நேரம் ஜபல்பூர் போய்ச்சேர்ந்தார்கள்.
 சிட்டியை விட்டு 30. 40 கிலோ மீட்டர் உள்ளே தள்ளீ இருந்தது ஆபீஸ். அங்குஅவர்கள் தங்குவதற்கு ஆபீசின்கெஸ்ட்ஹவுசில்இடம்கொடுத்திருந்தார்கள்.

Saturday, January 22, 2011

Saturday, January 22, 2011

ஆல்பம்






ஆல்பம்.




ப்ளாக்கில் நான் எழுதும் முதல் கதை.




தெரிந்தவர்கள் வீட்டில் போனமாதம் ஒருகல்யாணம் இருந்தது.வாசுவாலும் லதாவாலும்அதில் கலந்துக்கமுடியாமல் போச்சு. அதனால் ஒருசண்டே லீவு நாளில் அவர்கள் வீட்டில்கல்யாணம் விசாரிக்கப்போனார்கள். காபி,ஸ்னாக்ஸுடன் தடபுடலான வரவேற்பு. பின்பு

அந்தவீட்டு மாமியும் புதுமாட்டுப்பெண்ணீடம் சுபா, இவா ரெண்டுபேரும் கல்யாணத்துக்குவரலை. அந்தபோட்டோ ஆல்பத்தை எடுத்துண்டு வந்து காட்டுன்னாங்க. மருமகளும் உள்ளே

இருந்து ஆல்பம் கொண்டுதந்தா. எங்க இரு புரமும் மாமியும் மருமகளும் உக்காந்தாங்க. நாங்கஆர்வமுடன் ஆல்பம் பாக்க ஆரம்பித்தோம். நல்ல ஆடம்பரமாக, நிறைய செலவு செய்து க்ராண்ட்டாக கல்யாணம் செய்திருப்பது ஆல்பத்திலேயே தெரிந்தது. மாப்பிள்ளை பெண்ணின் ட்ரெஸ்ஸிலிருந்து, நகை நட்டுக்கள் வரை நல்ல பணம் விளையாடி இருந்தது.


Sunday, January 9, 2011

Sunday, January 9, 2011

ஹிமாச்சல்பிரதேஷ்(கடைசி பகுதி)

ஹிமாச்சல் ப்ரதேஷ்(பகுதி6) (கடைசி பகுதி)

இன்று கிளம்பணும் என்று எல்லாரும்7மணிக்கே எழுந்து ப்ரெக்ஃபாஸ்ட்டுக்காக டைனிங்க்ஹால்போனோம். அங்கு வட்டமாக உக்காந்து நேற்றுபோய் வந்த இடங்களைப்பற்றி பேசிக்
கொண்டிருந்தோம். பஞ்சாப் த்லை நகர் சண்டிகரிலிருந்து235 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதுபொற்கோவில்.சுற்றுலா வரும் எல்லா பயணிகளும் தவறாமல் பொற்கோவில் வருகிறார்கள்.குரு அர்ஜுன் தேவ் அவர்களால் 1588-ம் ஆண்டு இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.சீக்கிய
மத வழிபாட்டின் மையமாக இவ்வாலயம் உருவாக்கப்பட்டது.

Sunday, January 2, 2011

Sunday, January 2, 2011

ஹிமாச்சல்பிரதேஷ்(5)

ஹிமாச்சல்ப்ரதெஷ்.(பகுதி-5)




காலை எல்லாரும் சீக்கிரமே எழுந்தோம். இன்று கிளம்பணுமே? நேற்று போல இன்றுபனிப்பொழிவு இல்லை. ஆனாலும் செமை குளிர்.8மணிக்கு கிளம்பினோம். வளைந்துவளைந்து செல்லும் ரோட்டின் இரு புறமும் நீண்டு, நெடிதுயர்ந்த பச்சை,பசேல் மரங்கள்அணிவகுத்து வரிசையாக இருந்தன.சிறிதுதூரம் சென்றதும் தர்மசாலா என்று ஒரு இடம்வந்தது.அங்குபூராவும்திபேத்தியர்களின்கட்டுப்பாட்டில்இருக்கிறது.கொவில்,ஸ்கூல், வீடுகள் எல்லமே திபேத்திய கலாச்சாரம்.பெண்கள் கலர்,கலராக, உடலை சுற்றி,சுற்றி உடை அணிகிறார்கள். சிறுவர்,பெரியவர்,ஆண்கள் தலாய் லாமா ஸ்டைலில் உடலைச்சுற்றி டார்க் ப்ரௌன்கலரில் உடை அணிகிறார்கள்.ஆண்கள் தலை முடியும் முழுவதும் மழித்து விடுகிறார்கள்..