Wednesday, February 23, 2011

Wednesday, February 23, 2011

குக் ”ஜி” & பேடாகாட்(எண்ட்)




குக் ”ஜி” & பேடாகாட்






சீக்கிரமே ஆபீசுக்கு கிளம்பி போனான் கோபு. கிரிஜாவும் எதுவுமே

 தோன்றாமல் கிச்சனில் வந்து உக்காந்தா. என்னம்மா ஆச்சு என்று

 நாராயன் கேக்கவும் கண்களில் கண்ணீர் வழியுதே தவிர வாயிலேந்து

 வார்த்தையே வரலை. 10 மணிக்கு திரும்பவும் கோபு வீட்டுக்கு வந்தான்.

 நாராயனிடம் நேற்று நடந்த சம்பவங்களை ஹிந்தியில் விவரமாக சொன்னான்.

 எனக்கு லஞ்ச் வேணாம், நாங்க நாலுபேரு ஜபல்பூர் ஆஸ்பிடல் ப்போயி 

குழந்தைஎப்படி இருக்குன்னு பாக்கப்போயிட்டு இருக்கோம். 

அதுசொல்லிட்டுப்போலாம்னுதான்இப்ப வந்தேன். என்ரான் நாராயன் ஜி யும் 

எல்லாவற்றையும் கேட்டு பிரமிச்சுப்போனார்.

 சாப் அதுக்காக நீங்க ஏன் சாப்பிடாம போகனும். 10 நிமிஷத்ல ஏதானும் ரெடி 

பண்ணிடரேன்சாப்பிட்டே கிளம்புங்க. அப்புரம் சாப், ஒன்னு சொல்ரேன் தப்பா 

நினைக்காதீங்க. சந்தோஷமா

 பிக்னிக்குனு கிளம்பினவங்கதானே அவங்களும், கையில போதுமான பணம் 

இருக்குமோ இல்லியோ நீங்க நாலு பேரும் உங்களால முடிஞ்ச் அளவு பணம் 

கொடுத்தா, நல்லா இருக்கும்.என்று தயங்கியபடியே சொன்னார். குட் ஐடியா 

நாராயன் ஜி, எனக்குத்தோனவே இல்லியே.

 கண்டிப்பா கொடுக்கரோம். சரியான சமயத்தில் நினைவு படுத்தினீங்க. நன்றி நாராயன் ஜி.



அவசர்மாக லஞ்ச் ரெடிபண்ணி கோபுவை சாப்பிட வைத்தார்.கிரிஜாவிடமும் 

சொல்லிக்கொண்டுகிளம்பினான் கோபு. ஏங்க நா, சோன்னதையும் கொஞ்சம் 

நினைவு வச்சுக்கோங்க, என்றாள்,கிரிஜா.


ஆகட்டும்மா. என்று கோபு கிளம்பினான். நாராயன், கிரிஜாவை 

சமாதானப்படுத்தும் விதமாக பேசினார்.


பிறகு அவள் பெட்ரூம் போயி படுத்துட்டா.5 மணி கோபு திரும்ப வந்தான். 

குழந்தை எப்படி இருக்குன்னுநாராயன், கிரிஜா இருவரும் ஒரே சமயத்தில் 

கேட்டார்கள். சரியான நேரத்துல கூட்டினு போயிட்டோம்

 இல்லியா. இப்ப ஓ. கே தான். ஆனா கால் போனது போனதுதான். குழந்தை 

உசிரோட கிடைச்சுதேஅதை நினைச்சு சமாதானபடுத்திக்க 

வேண்டியதுதான்.என்ரான். நாராயன் சாய், பிஸ்கெட் கொண்டுவந்தார்.

 அதைக்குடித்தவாரே, தன் பேக்கிலிருந்து ஒருபுது செல்போன் எடுத்து 

கிரிஜாவிடம் கொடுத்தான்.

  நாராயன் ஜி இங்க வாங்க, என்று கூப்பிட்டு அவர்கையில் 

செல்போனைக்கொடுத்தாள். என்னம்மாஎன்றார். உங்களுக்குத்தான். 

வாங்கிக்கோங்க என்றாள். ஐயோ எனக்கா?இதெல்லாம் எதுக்கும்மா?

    இதை எப்படி யூஸ்பண்ணனும்னெல்லாம் எனக்குத்தெரியாதும்மா. என்றார்.



நாராயன் ஜி நாங்க வந்தன்னிலேந்து எங்களை எவ்வளவு அன்பா பாத்துப்பாத்து 

கவனிச்சுக்கிட்டிங்கஎங்களுக்கும் , உங்களுக்கு ஏதானும் கொடுக்கணும்போல 

இருந்தது. என்ன கொடுப்பதுன்னு புரியலை.


நீங்க குடும்பத்தை விட்டுப்பிரிஞ்சு தனியா இருக்கீங்க. கெஸ்ட் ஹவுசிலுள்ள் 

போன் வெரும் ஆபீசுக்குமட்டுமே பேச முடியும். 10, 15, நாளுக்கு 

ஒருமுறைலெட்டர்மூலமாத்தானே மனைவி கூட பேசரீங்க.

     இனிமேல வாரம் ஒரு முறையாவது மனைவி, மகன்களின் 

குரலைஇக்கேக்கலாம். போபால்ல போன்இருக்கா? என்றாள். ஏதும்மா 

அதெல்லாம் பக்கத்துக்கடைலெ இருக்கு போயி சொல்வாங்க. என்ரார்.

      நம்பர் இருக்கா என்று கேட்டாள் கிரிஜா. ஆமாம்மா, என்று நம்பர் சொன்னார், 

உடனே அந்த நம்பர்போட்டு அவரைப்பேசச்சொன்னா. பையா, நா நாராயன், 

ஜபல் பூர்லேந்து பேசரேன் ரீமா வைக்கொஞ்சம் கூப்பிட முடியுமா, நா 5 நிமிஷம் 

கழிச்சுக்கூப்பிடரேன் என்றார்.போனைக்கட் செய்து

            மிகவும் பரபரப்புடன் கானப்பட்டார். நாராயன் ஜி என்னாச்சு? என்று கிரிஜா       

கேக்கவும், ஒன்னு


மில்லைமா இதுவரை மனைவியுடன் போன்ல்ல பேசினதே இல்லே.அதான் 

என்றார்.5 நிமிடங்களுக்குப்பிறகு அந்த நம்பர் கூப்பீடதும் கடைக்காரரே எடுத்து 

நாராயன் உங்க மனைவி வந்துட்டாஅவகூட பேசுங்க என்று அவளிடம் 

கொடுத்தார்போனை.மனைவியின் குரல் கேட்டதும் நாராயன்

           உடைந்து போயி அழவே ஆரம்பித்துவிட்டார்.





    அழுகையின் ஊடே இருவரும் 10 நிமிடங்கள் பேசினதும் போனைக்கட் 

பண்ணினார்.சாப், மேம் சாப் நீங்க எனக்கு மிகப்பெரிய உதவிசெய்திருக்கீங்க, 

போன்ல என் பீவி கூட போன்லலாம் பேசுவேன்னு நினைச்சுக்கூட 

பாத்ததில்லைமா.எனக்கு எப்படிநன்றி சொல்லனும்னே தெரியலை. என்று 

ரொம்பவே உணர்ச்சி வசப்பாடு பேசினார்.

                  கிரிஜா அவரை உக்காத்தி வச்சு போனை எப்படி உபயோகப்படுத்தனும், 

எப்படி சார்ஜ்பண்ணனும் என்று 

விவரமாகச்சொல்லிக்கொடுத்தாள்.கவனமாகக்கேட்டு மனதில் பதிய


வைத்துக்கொண்டார்.அடுத்தவாரம்கோபுகிரிஜாநாக்பூர்கிளம்பினார்கள்.னாராய

ன் ஜி எங்களுக்கும் 10 நாளுக்கு ஒரு முறை போன் பண்ணுங்க. நாங்களும் 

பண்ரோம்.என்றுவழியில் ட்ரெயினில் அவர்களுக்கு சாப்பாடு ஸ்னாக்ஸ் என்று 

தாராள்மாகச்செய்துகொடுத்தார். நாராயன் ஜி முடிஞ்சா ஒரு முறை நாக்பூர் 

வாங்க என்று கோபு சொன்னான்.


பிரிய முடியாமல் நாராயன் ஜி கிரிஜா, கோபு எல்லார் கண்களுமே கலங்கி இருந்தன.


15 comments:

எல் கே said...

நல்ல கதை ரொம்ப எளிமையா நல்லா சொல்லி இருக்கீங்க

Asiya Omar said...

எதார்த்தமான எழுத்து,அருமையாக சொல்லியிருக்கீங்க.

ம.தி.சுதா said...

எங்கேயோ கோண்டு போய் கடைசில பிலிங்கோட முடிச்சிட்டிங்களே நல்லாயிருக்கு....

Mahi said...

/சற்றே பெரிய சிறுகதை/ என்று லேபிள் பண்ணியிருக்கீங்க,இது கதையா இல்லை உண்மை நிகழ்வா என்று தெரியல,எப்படி இருப்பினும் மனதைத் தொட்ட நிகழ்ச்சி!

ஒவ்வொரு பகுதியையும் விடாமல் படித்துக்கொண்டுதான் இருந்தேன்,கமெண்ட் போடத்தான் டைமில்லாமல் போயிட்டது.

தமிழ்வாசி பிரகாஷ் said...

கதை அருமை...

enrenrum16 said...

நல்ல முடிவு... நாராயணுக்கு மொபைல் வாங்கிக் கொடுத்தது நல்ல யோசனை... எல்லா பாகமும் நல்ல விறுவிறுப்பாக அமைந்தன.. பாராட்டுக்கள்.. இது உண்மையில் நடந்த கதையா? (முதலை சம்பவம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன்)

கோலா பூரி. said...

நன்றி, கார்த்திக்.

கோலா பூரி. said...

ஆஸியாஓமர், வருகைக்கு நன்றிம்மா.

கோலா பூரி. said...

ம. தி. சுதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோலா பூரி. said...

மஹி, வருகைக்கும் பார்ராட்டுக்கும் நன்றி.

கோலா பூரி. said...

தமிழ் வாசி, வருகைக்கு நன்றி.

கோலா பூரி. said...

என்றும்16 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.50/50.

கோலா பூரி. said...

தகவலுக்கு நன்றி.

ஆனந்தி.. said...

இறுதியில் ரொம்பவே நெகிழ்ச்சியா முடிசிட்டிங்க கோம்ஸ்...(ரொம்ப லேட் ஆ வந்ததுக்கு சாரி கோம்ஸ்...)

கோலா பூரி. said...

லேட்டான்லும் வந்தீங்க இல்ல்யா அதுக்கு நன்றி.